/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
ஜெயேந்திரர்
/
அகந்தை உடையவன் தாழ்நிலையை அடைவான்
/
அகந்தை உடையவன் தாழ்நிலையை அடைவான்
ADDED : மே 31, 2017 03:05 PM

* உண்மை, பொறுமை, அமைதி மிக்க நல்லவர்களின் சொல்லுக்கு சக்தி அதிகம். இவர்கள் சொன்னது அப்படியே பலிக்கும்.
* ஆசை இருக்கும் வரை மனிதனைப் பிறவிப்பிணி தொடரும். ஆசையற்ற நிலையில் ஜீவன் முக்தி அடைந்து விடும்.
* தாயும், தந்தையுமே கண்கண்ட தெய்வங்கள். அவர்களுக்கு பிள்ளைகள் உதவி செய்ய வேண்டியது கடமை.
* தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி தரும் செயல்களில் மனிதன் ஈடுபட வேண்டும்.
* திருப்தியுடன் வாழ்வதை விட மேலான செல்வம் வேறில்லை. நல்லவர்கள் புகழும் விதத்தில் நம் வாழ்வு அமைய வேண்டும்.
* அடக்கமுடையவன் வாழ்வில் படிப்படியாக உயர்வான். அகந்தை உடையவன் படிப்படியாக தாழ்நிலையை அடைவான்.
* சுகத்தை அனுபவிக்க புண்ணியத்தை விதையுங்கள். நற்செயல்களில் ஈடுபட்டால் அது மரம் போல வளர்ந்து நமக்கு நிழல் கொடுக்கும்.
ஜெயேந்திரர்